தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்றிரவு (ஜன.21) சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். கோயிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து கோயிலிலுள்ள ஆனந்தவிலாஸ் மண்டபத்தில் வைத்து சத்ரு சம்ஹார யாகம் நடத்தினார்.
சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த யாகத்தில் தொடர்ந்து சூரசம்ஹார மூர்த்தி சன்னதியில் எதிரிகளை வெல்லக்கூடிய சத்ரு சம்ஹார பூஜை நடத்திச் சிறப்பு வழிபாடு செய்தார். சிறப்பு யாகம் மற்றும் பூஜைகளைப் படம் எடுக்கச் செய்தியாளர்கள் உட்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை.