தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரட்டையர்கள் நீரில் மூழ்கி மரணம்! - நீரில் மூழ்கி இரட்டையர்கள் பலி

தூத்துக்குடி: பாட்டிக்கு சாப்பாடு கொடுக்க சென்ற இரட்டையர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Death
Death

By

Published : Nov 12, 2020, 4:18 PM IST

தூத்துக்குடி மாவட்டம், புதியபுத்தூர் அருகேயுள்ள மேல அரசரடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி பூரணம். இந்த தம்பதியருக்கு அருண் சுரேஷ் (12), அருண் வெங்கடேஷ் (12) என இரட்டை ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

செல்வராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் பூரணம் தனது மகன்களுடன் அப்பகுதியில் பாட்டியின் பாதுகாப்பில் வசித்து வந்தனர்.

சிறுவர்களின் பாட்டி தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் பாட்டிக்கு தினசரி சாப்பாடு கொடுப்பதற்காக சிறுவர்கள் 2 பேரும் வீட்டிலிருந்து சைக்கிளில் வந்து செல்வது வழக்கம்.

இதேபோல் நேற்று (நவ. 11) மதியமும் அவர்கள் 2 பேரும் பாட்டிக்கு சாப்பாடு கொடுப்பதற்காக சைக்கிளில் வந்துள்ளனர். பின்னர் வீடு திரும்பும் வழியில் அருகில் இருந்த ஊருணிக்கு சென்று குளித்ததாகத் தெரிகிறது.

அப்போது ஆழமான பகுதிக்குச் சென்று குளிக்கையில் நீர் சுழலில் சிக்கி இரட்டையர்கள் இரண்டு பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அக்கம்பக்கத்தில் ஆட்கள் யாரும் இல்லாததால் சிறுவர்களை காப்பாற்ற முடியாமல் போனது.

சாப்பாடு கொடுக்கச்சென்ற சிறுவர்கள் இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், பதட்டம் அடைந்த உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் சிறுவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

உயிரிழந்த இரட்டையர்கள்

இன்று (நவ. 12) காலை சந்தேகத்தின்பேரில் ஊருணிக்கு சென்று உறவினர்கள் தேடி பார்க்கையில் ஊருணியில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இறந்து கிடப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவலளிக்கப்பட்டது. தகவலின் பெயரில் அங்கு வந்த காவல்துறையினர் தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் இறந்த இரு சிறுவர்களின் சடலத்தை மீட்டனர். பின் அவர்களது சடலத்தை உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தந்தை இறந்த சில ஆண்டுகளிலேயே இரட்டையர்களான சிறுவர்கள் இரண்டு பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details