தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் மீண்டும் பழுது: போக்குவரத்து பாதிப்பு - பாலம் மீண்டும் பழுது

தூத்துக்குடி- வல்லநாடு தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் மீண்டும் பழுதடைந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு
போக்குவரத்து பாதிப்பு

By

Published : Oct 28, 2022, 10:08 PM IST

கன்னியாகுமரி- காஷ்மீர் இடையேயான தேசிய நெடுஞ்சாலையுடன் தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் வகையில், திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரை 47.250 கி.மீ. தொலைவுக்கு ரூ.349.50 கோடியில் நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு, 2013-ம் ஆண்டு முடிவடைந்து வாகன போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் பயணித்து வருகின்றன.

இந்த சாலை அமைக்கப்பட்ட நாளில் இருந்தே தொடர்ந்து பல்வேறு புகார்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக இந்த சாலையில் வல்லநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் தொடர்ந்து சேதமடைந்து வருகிறது. இதுவரை 7 முறை பாலத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ம் தேதி சேதமடைந்த பாலத்தின் ஒரு பகுதி இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக அனைத்து வாகனங்களும் ஒருவழிப் பாதையில் சென்று வருகின்றன. இந்த ஒருவழி பாலத்திலும் அவ்வப்போது ஓட்டை விழுவதும், தற்காலிகமாக சரி செய்வதுமாக தொடர்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தோறும் மிகுந்த அச்சத்துடனே இந்த பாலத்தை கடந்து வருகின்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து தான் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டத்திற்கு முதல்வர், மத்திய அமைச்சர்கள், என பலர் வந்து செல்கின்றனர். இந்த சாலையை பல்வேறு பிரபலம் உபயோகித்து வந்தாலும் கூட பராமரிப்பு இல்லாத சாலை, முடிவடையாத பாலம் என இந்த பிரச்சினைகள் தொடர தான் செய்கிறது என்கின்றனர். வாகன ஓட்டிகளும் பொதுமக்களும், பாலத்தில் இரண்டு இடங்களில் திடீரென சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து சேதமடைந்துள்ள பாலத்தின் பகுதிகளையும் தடுப்பு வைத்து அடைத்து இருபுறமும் வாகனங்கள் இயக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் செல்லமுடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மோசடி புகார்: வழக்கை ரத்து செய்யக் கோரிய செந்தில்பாலாஜி மனு மீது அக்.31 தீர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details