தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் சந்திஸ்டன் (25). மீனவரான இவர் கடந்த 24ஆம் தேதி காலை ஆறு மணி அளவில் சக மீனவர்கள் முனியசாமி, முத்து, எட்ராஜா, சண்முகவேல், அரசு, பிரசாத், ராமன் ஆகியோருடன் சேர்ந்து பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் ஆழ்கடலில் சங்கு குளிப்பதற்காகச் சென்றார்.
அங்கு தாமஸ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி சில மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அதில் சந்திஸ்டன் எதிர்பாராதவிதமாக சிக்கி உயிரிழந்தார். இதைப்பார்த்த விசைப்படகு மீனவர்கள் சுருக்குமடி வலையை அறுத்தெறிந்துவிட்டு உடனடியாக கரைக்கு திரும்பினர்.