தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணம் ஆசை காட்டி பாலியல் வன்புணர்வு! இளைஞருக்கு 10 ஆண்டு சிறை - திருமணம்

தூத்துக்குடி அருகே திருமணம் ஆசை காட்டி பெண்ணிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட இளைஞர், அப்பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததால் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Mahila court  sexually assaulting a woman  sexually assault  harassment case  Thoothukudi Mahila court  Thoothukudi  Thoothukudi news  Thoothukudi latest news  பாலியல் வன்புணர்வு  இளைஞருக்கு 10 ஆண்டு சிறை  சை காட்டி பெண்ணிடம் பாலியல்  தூத்துக்குடி  திருமணம் ஆசை காட்டி பாலியல் வன்புணர்வு  மகிளா நீதிமன்றம்  திருமணம்  பாலியல்
பாலியல் வன்புணர்வு

By

Published : Dec 1, 2022, 1:01 PM IST

தூத்துக்குடி:மாவில்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் மாரீஸ்வரி. இவர் சாத்தூரில் தையல் பயிற்சிக்கு சென்ற போது, அதே பகுதியை சேர்ந்த அழகுராஜ் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அழகுராஜ் விளாத்திகுளத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில், தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில், மாரீஸ்வரியை வேலைக்கு சேர்த்துள்ளார். தொடர்ந்து மாரீஸ்வரியை திருமணம் செய்துகொள்வதாக கூறிய அழகுராஜ் அவரது வீட்டிற்கு அடிக்கடி அழைத்துச் சென்றுள்ளார். மேலும் ஆசை வார்த்தைக் கூறி அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் கருவுற்ற மாரீஸ்வரி, அழகுராஜிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு அழகுராஜ் மறுப்பு தெரிவித்தால், மாரீஸ்வரி கடந்த 2015 ஆம் ஆண்டு மகளிர் காவல் நிலையத்தில் அழகுராஜ் மீது புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் அழகுராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கினை அரசு வழக்கறிஞர் எல்லம்மாள் ஆஜராகி வாதாடி வந்தார்.

இன்று (டிசம்பர் 1) இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி மாதவராமனுஜம் குற்றவாளி அழகுராஜ்க்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

இதை கட்ட தவறினால் கூடுதலாக 1 ஆயிரம் அபராதம் 3 மாத கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இதற்கிடையில் அழகுராஜ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஏரியில் பெண் சிசு சடலமாக மீட்பு: போலீஸ் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details