தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் ஒரே நாளில் 195 பேருக்குக் கரோனா தொற்று உறுதி! - தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி : ஒரே நாளில் 195 பேருக்குக் கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,949ஆக அதிகரித்துள்ளது.

Thoothukudi Latest Corona Update
Thoothukudi Latest Corona Update

By

Published : Jul 11, 2020, 8:02 AM IST

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் உள்ளிட்ட 194 பேருக்கும், வெளிநாட்டில் இருந்த வந்த ஒருவருக்கும் என மொத்தம் 195 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,949 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சைப் பெற்று வந்த கோவில்பட்டியைச் சேர்ந்த 60 வயது பெண் உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஆறு காவல் துறையினருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து காவல் நிலையம் மூடப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை 1,024 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது 393 பேரும், கோவில்பட்டி, திருச்செந்தூர் அரசு மருத்துவமனைகள், தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி கோவிட் சிறப்பு மையம் ஆகியவற்றில் 520 பேரும் என மொத்தம் 913 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details