மத்திய அரசின் ஐஓசிஎல் நிறுவனம் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம் தொடங்கி கடலோரங்கள் வழியாக தூத்துக்குடி மாவட்டம் முத்தயபுரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
90 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் பொட்டல்க்காடு, குலையன்கரிசல், சேர்வைகாரன்மடம், தங்கம்மாள்புரம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்களில் எரிவாயுக் குழாய் பதிப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது. இதனிடையே அவ்வபோது ஐஓசிஎல் நிறுவனத்தினர் அத்துமீறி இழப்பீடு பெறாத விவசாயிகளின் நிலங்களில் வழியேயும் எரிவாயு குழாய் பதிப்பதற்கு முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.