தூத்துக்குடி : தொழில் துறை சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்பி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம், கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் பணிகள், மதிப்பீடு விவரம், பணிகளின் தற்போதைய நிலை, திட்ட வரையறைக்கான கால அளவு, எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கனிமொழி எம்.பி., ”தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் தொழில் வளர்ச்சி திட்ட பணிகள், மாவட்ட வளர்ச்சி சார்ந்து புதிய தொழிற்சாலைகளை அமைத்தல், அதன் மூலமாக வேலை வாய்ப்பை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து இன்று (ஜூலை.11) ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தொழிற்பூங்கா அமைக்க திட்டம்