தருவைகுளத்தைச் சேர்ந்த அந்தோணி மிக்கேல் கெமில்டன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடந்த மாதம் 12ஆம் தேதி 8 மீனவர்கள் தருவைக்குளத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடித் தொழிலுக்குச் சென்றனர்.
மீனவர்கள் கைது
கன்னியாகுமரி கடல் பகுதியில் தென்திசையில் மீன்பிடித்தொழில் செய்துகொண்டிருந்தபோது, அதிவேக நீரோட்டத்தின் காரணமாக எதிர்பாராதவிதமாக படகு மாலத்தீவின் எல்லை அருகே சென்றுவிட்டதாகத் தெரிகிறது.