தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திக்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவு பனங்கிழங்கு விவசாயம் நடைபெற்றுப் வருகிறது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் இதனை அறுவடை செய்யும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழர் திருநாள் தைத்திருநாளில் இடம் பெரும் பொருள்களில் பனங்கிழங்கும் ஒன்று. பனை மரத்தில் கொத்து கொத்தாக காய்க்கும் நுங்கை வெட்டாமல் விட்டுவிட்டால் நன்றாக பழுத்து பனம்பழமாகிவிடும்.
பனைங்கிழங்கு சாகுபடி
மரத்தில் இருந்து பனம்பழத்தை வெட்டி குழியில் போட்டு புதைத்து, பனங்கிழங்கு சாகுபடி செய்கிறார்கள். தாங்கள் சாகுபடி செய்யும் இடத்தில் பத்து அடி நீளம், பத்து அடி அகலத்துக்கு பாத்தி கட்டி அதனுள் ¼ அடி ஆழத்துக்கு குழி தோண்டி அதற்குள் பனையில் இருந்து வெட்டி எடுத்து கொண்டு வந்த பனம்பழ விதைகளை நெருக்கமாக அடுக்கி வைத்து, மண்ணில் புதைத்து வைத்து, பின்னர் அவ்வப்போது தண்ணீர் தெளித்து வருகின்றனர்.
அறுவடை
மழை காலத்தில் பூமிக்குள் புகும் நிலத்தடி நீரை உறிஞ்சி தானாகவே கிழங்கு விளையும்.