தமிழ்நாடு

tamil nadu

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா கொண்டாட்டம்

By

Published : Oct 29, 2019, 5:20 PM IST

திருச்செந்தூர்: கந்த சஷ்டி விழாவில் சுவாமி வள்ளி, தெய்வானையுடன் தங்கத்தேரில் வீதியுலா வந்தார்.

Thiruchendur murugan temple Festival, திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா கொண்டாட்டம்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடானது திருச்செந்தூர் முருகன் கோயில். இங்கு நடைபெறும் மிக முக்கிய விழாக்களில் ஒன்று கந்தசஷ்டி திருவிழா. இவ்விழாவானது இன்று அதிகாலையில் யாகசாலை பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது.

Thiruchendur murugan temple Festival, திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா கொண்டாட்டம்

சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் கந்த சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

இதில் பெண்கள் மடி பிச்சை ஏந்தி பின்னோக்கிச் சென்று, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேல், வேல், முருகா... வெற்றிவேல்... முருகா... என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க:ஆலய வழிபாட்டிற்கு வருகை தந்த ஆளுநர்; ஒரே இரவில் நடந்த விழா ஏற்பாடு!

ABOUT THE AUTHOR

...view details