சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணன் (30). இவர், படப்பை அடுத்துள்ள டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காயத்ரி (23) என்பவருக்கும் நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
காயத்ரி செம்மஞ்சேரியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் ஐடி ஊழியராகப் பணி செய்து வந்தார். இவர்களுக்குத் திருமணமாகி மூன்று மாதங்களாக பெருங்களத்தூர் புத்தர் தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.
திருமணமான நான்கு மாதத்திற்குள் தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று பணிக்குச் சென்ற சரவணன் இன்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் உள்ள படுக்கை அறையில் மனைவி காயத்ரி தற்கொலை செய்து கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.