தூத்துக்குடி எம்.பி கனிமொழி இன்று எட்டயபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கீழ்நாட்டுக்குறிச்சி, கைலாசபுரம், மாசார்பட்டி, மேலக்கரந்தை, சென்னமரெட்டிபட்டி, முத்துசாமிபுரம், மெட்டில்பட்டி, வெம்பூர் ஆகிய கிராமங்களின் வாக்காளர்களுக்கு இன்று நன்றி தெரிவித்தார். அப்போது மக்களிடம் அவர் பேசுகையில், ‘இதற்கு முன் இருந்த மக்களவை உறுப்பினரைப் போல் இல்லாமல், தொடர்ந்து உங்களை வந்து சந்தித்து, உங்கள் பிரச்னைகளை உங்களோடு நின்று சரி செய்வதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்வேன்.
இதேபோல், இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப் பாடுபடுவேன். மேலும் மக்களவைத் தேர்தலில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும், கூட்டணி கட்சியினருக்கும் நன்றி’ என்றார்.