தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 28, 2022, 8:08 PM IST

ETV Bharat / state

'தமிழ்நாட்டில் தீவிரவாத செயலை அனுமதிக்க முடியாது' - அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் தீவிரவாத நடவடிக்கை, பயங்கரவாத செயல்களுக்கு முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார். தீவிரவாதம் விரட்டி அடிக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாடு ஆளுநர் கோவையில் நடைபெற்ற ஒரு சம்பவத்தின் அடிப்படையில், இந்த சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு பிறகு தான் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

கோவையில், நடந்த சம்பவம் சில நொடிகளிலேயே அருகில் ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு அளித்த தகவலின்படி, சில மணி நேரங்களில் விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

இதில், மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் இந்த விஷயத்தை கேள்விப்பட்டவுடன் அங்கே இருக்கக் கூடிய ஐபி மத்திய உளவுத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருக்கிறார்கள். மாநில உளவுப் பிரிவு அதிகாரிகளும் சம்பவம் நடந்திருக்க கூடிய அன்றைய தினமே இந்த வெடி விபத்தில் இறந்த ஜமேஷா முபின் இறந்தவருடைய அந்த நபருடைய அடையாளம் உடனடியாக காணப்பட்டு அதுக்கு 24 மணி நேரத்திற்குள்ளாக அவருடைய வீடும் சோதனை இடப்பட்டிருக்கிறது.

அந்த அடிப்படையில், இது சிலிண்டர் விபத்து அல்ல, எனவே அங்கு இருக்கக்கூடிய கிடைத்திருக்கக் கூடிய பொருட்களில் இது வெறும் சிலிண்டர் விபத்து அல்ல, பின்னால் பயங்கரவாத செயலில் இருக்கக்கூடும் என்பதை காவல்துறை வழியாக அடிப்படையில் உடனடியாக விசாரணையை முடித்து விட்டு அன்றைய தினமே கூட்டாளிகளையும் உடனடியாக அடையாளம் கண்டு அவர்களை காவல்துறை கைது செய்து விசாரணை வலயத்தில் கொண்டு வந்து இருக்கிறது.

24ஆம் தேதி காலையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் அத்தனை பேரும் மாநில காவல்துறை உதவியோடு செயல்பட்டனர். மாநில காவல்துறை தமிழக காவல்துறைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு, இத்தகைய பயங்கரவாதச் ஆயுதங்கள் வைத்து இருக்க கூடிய இத்தகைய சம்பவங்கள் எதுவாக இருந்தாலும் எப்போதுமே மத்திய அரசு உறவு அமைப்புகளோடு இணைந்து செயல்பட கூடிய நடைமுறையை நம்முடைய தமிழ்நாடு காவல்துறை தொடர்ந்து கொண்டு வருகிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தடை செய்யப்பட்டு கூடிய அந்த நேரத்தில் கூட நம்முடைய மாநில காவல்துறை அதிகாரிகள் நம்முடைய காவல்துறை எந்த அளவிற்கு மத்திய உளவுத்துறையிடன் சேர்ந்து தகவல்கள் சேகரித்து பங்களிப்பு மிக சிறப்பாக இருந்தது என்று மத்திய அரசு பாராட்டியுள்ளது.

இந்த அளவிற்கு இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் காவல்துறையின் தேசிய புலனாய்வு அமைப்புக்கு தாங்கள் இவ்வளவு தூரம் ஒத்துழைத்தது இல்லை என்று பாராட்ட கூடிய அளவில் நம்முடைய தமிழ்நாடு காவல்துறை உள்ளது. 25 ஆம் தேதி அன்று பயங்கரவாத தடை சட்டம் போடப்பட்டு உள்ளது. தேசிய மற்றும் மாநில காவல்துறை அதிகாரிகள் இணைந்து விசாரணைக்காக காவல் துறையோடு தேசிய புலனாய்வு முகமை தொடர்ச்சியாகப் ஒரு மாநிலத்தில் இப்படிப்பட்ட ஒருமுதல்கட்ட விசாரணையை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு மாநில காவல்துறையை சார்ந்ததாக இருக்கிறது.

2019ஆம் ஆண்டு ஜமேஷா முபின் ஏன் விடுவிக்கப்பட்டார் என்பது எங்களுக்கு தெரியாது. அப்போதைய அதிகாரிகளுக்கு தான் தெரியும். தொடர்ச்சியாக 23 ஆம் தேதி காலை முதல் 26 வரை என்னென்ன நடந்திருக்கிறது. தமிழ்நாடு அரசும் காவல்துறையும் இணைந்து இந்த விஷயத்தில் தெளிவு படுத்தி இருக்கிறது.

எந்த ஒரு கட்டத்திலும் தேசிய புலனாய்வு முகமை தெரிவிக்கப்படாமலும், அல்லது மத்திய உளவுத்துறைக்கு செய்திகள் பகிர்ந்து கொள்ளப்படவில்லை. தொடர்ச்சியாக அவர்களும் நம்மோடு இணைந்து பயணித்திருக்கிறார். தமிழ்நாடு அரசின் காவல்துறை மாத்திரம் ஏதோ செய்துவிட்டது போலவும் இந்த விசாரணையைத் எடுத்து அனுப்பி இருப்பதை போன்ற தோற்றம் காணப்படுகிறது.

முதலமைச்சர் தொடர்ந்து ஒவ்வொரு நாள் காலையிலும், கண்காணிப்பாளர் அவருடைய அறிவுரைகள், அவருடைய நேரடியான தெளிவுரைகள் வழங்கி இந்த விசாரணையை சரியான பாதையில் செல்ல வேண்டும் என்று முடிக்கி விட்டார். முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி தமிழ்நாடு அரசினுடைய காவல்துறை இந்த விஷயத்தை மிகத் திறமையாக கையாண்டது. இந்த விஷயத்தில் எந்த ஆதாரங்களும் அழிக்கப்படவில்லை, தொடக்கம் முதலே தேசிய புலனாய்வு முகமை கூடவே இருந்தது.

தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் தீவிரவாத நடவடிக்கை, பயங்கரவாத செயல்களுக்கு முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார். தீவிரவாதம் விரட்டி அடிக்கப்படும்" என்று அவர் உறுதியளித்தார்.

இதையும் படிங்க:கோவையில் கார் வெடிப்பு - என்.ஐ.ஏ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் உள்ள தகவல்கள் என்ன?

ABOUT THE AUTHOR

...view details