தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அமலி நகரைச் சேர்ந்தவர் ஆல்வின் (36). மத போதகரான இவர், தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும் பணிபுரிந்துவந்துள்ளார். கரோனா வைரஸ் காரணமாக தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கடந்த 15 நாள்களுக்கு முன்னர் அவர் தூத்துக்குடி வந்துள்ளார்.
பள்ளி விடுதியில் ஆசிரியர் தற்கொலை -காவல் துறை விசாரணை - தமிழ் குற்ற செய்திகள்
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே பள்ளி விடுதி அறையில், ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் அவர் பணிபுரியும், பள்ளியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாக அவரது அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து பள்ளி ஊழியர்கள் ஜன்னல் வழியே பார்த்தபோது ஆல்வின், மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ஆல்வினின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.