தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மத்தியில் பாஜக கூட்டணி அரசுதான் மீண்டும் ஆட்சியில் அமர போகிறது. தற்போது வருகிற கருத்து கணிப்புகள் எல்லாம் பாஜகவுக்கு ஆதரவாகதான் உள்ளது.
அதேபோல் மாநிலத்திலும் பாஜக கூட்டணி ஆட்சிதான் அமையும். நாளைய தினம் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். இதற்கான பொதுக்கூட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது என்றார்.