தமிழ்நாடு

tamil nadu

பஞ்சர் கடை உரிமையாளர் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறப்பு - போலீஸார் விசாரணை

தூத்துக்குடி அருகே பஞ்சர் கடை உரிமையாளர் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

By

Published : Jun 19, 2022, 7:46 PM IST

Published : Jun 19, 2022, 7:46 PM IST

பஞ்சர் கடை உரிமையாளர் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறப்பு
பஞ்சர் கடை உரிமையாளர் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறப்பு

தூத்துக்குடி: சாத்தான்குளம் புதுகுளம் பகுதியைச்சேர்ந்த ராம் என்பவரது மகன் கருப்பசாமி (47). இவரது மனைவி சங்கரி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் சிறியதாக குடிசை கட்டி, பஞ்சர் கடை நடத்தி வருகிறார்.

தூத்துக்குடி அருகில் விடுதியில் தங்கி வேலை பார்த்து வரும் இவர் இன்று (ஜூன் 19) அதிகாலை திருச்செந்தூர் சாலையில் உள்ள அவரது கடையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்து கிடந்தார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:CCTV: குடிக்கப்பணம் கேட்டு காரை அடித்து நொறுக்கிய போதைக்கும்பல்; 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு!

ABOUT THE AUTHOR

...view details