தூத்துக்குடி: பாண்டுரங்கன் தெருவை சேர்ந்தவர் சங்கர் ராஜ். இவரது மனைவி மாரீஸ்வரி. இந்த தம்பதிக்கு சார்விக் சரண் (6) என்ற மகன் உள்ளார். மூன்று வயது முதல் மழலையர் பள்ளியில் படித்து வந்த இந்த சிறுவன் கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்ட காரணத்தால் வீட்டில் இருந்து பாடம் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஆறு வயது நிரம்பியதும் சார்விக் சரணை அவனது பெற்றோர் 1ஆம் வகுப்பில் சேர்த்துள்ளனர். ஆனால் கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்காத சூழலில் ஆன்லைன் மூலமாக படித்து வந்துள்ளார்.
இருப்பினும் ஆன்லைன் படிப்பில் ஆர்வம் காட்டாமல் சிறுவன் சார்விக் சரண் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து சிறுவனின் தாயார் மாரீஸ்வரி, அவருக்கு அனைத்து நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் பெயர்களை சொல்லிக் கொடுத்துள்ளார்.
இதை மனதில் வைத்துக் கொண்ட சிறுவன் அனைவரின் பெயர்களையும் எப்போது கேட்டாலும் சொல்லுமளவுக்கு நினைவாற்றலில் சிறந்து விளங்க ஆரம்பித்தார்.