தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் கொடை விழா - வேட்டைக்கு சென்ற சாமியாடி கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே கோயில் கொடை விழாவில் சாமியாடி ஒருவர் வேட்டைக்குச் சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

By

Published : May 29, 2022, 9:37 PM IST

சாமியாடி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு
சாமியாடி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள எல்லை நாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கருப்பசாமி கோயிலில் நேற்று முன்தினம் (மே 27) கொடை விழா நடைபெற்றது. இரவு 1.30 மணியளவில் சாமக்கொடை நடைபெற்றது. அப்போது தெய்வச் செயல்புரத்தைச் சேர்ந்த சாமியாடி முருகன் (65) என்பவர் வேட்டைக்குச் சென்றார்.

சுமார் 2 மணி நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை தேடி காட்டுப் பகுதிக்குச் சென்றனர். அப்போது அங்குள்ள கிணற்றில் சாமியாடி தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து, புதுக்கோட்டை காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சாமியாடி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சாமியாடி முருகனின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை - 9 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details