தூத்துக்குடி: தூத்துக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள வேம்பார், தூத்துக்குடி, முத்தையா புரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி ஆகியப் பகுதிகளில் 20 ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இதில், சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். மேலும் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
நாட்டில் குஜராத் மாநிலத்திற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகம். தூத்துக்குடி மாவட்டத்தில், ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை 6 மாதங்கள் முழு வீச்சில் உப்பு உற்பத்தி நடைபெற்றது. இதில், சுமார் 15 லட்சம் டன் உப்பு உற்பத்தியானது நடைபெற்றது. வடகிழக்குப் பருவ மழை தொடங்கிய பிறகு உப்பு உற்பத்தி சீசன் முடிவடைந்தது.