தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 7, 2020, 1:54 PM IST

ETV Bharat / state

சாலை விபத்தில் குழந்தையுடன் தாய் உயிரிழப்பு

தூத்துக்குடி: குறுக்குச்சாலை அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே தாய் மற்றும் 9 மாத குழந்தை உயிரிழந்தனர்.

Tirunelveli accident
Tirunelveli 9 month child died at road accident

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகா பட்டியூரைச் சேர்ந்தவர் காளியப்பன். கூலிவேலை செய்து வரும் இவருக்கு மாலா (31) என்ற மனைவியும், வெள்ளைச்சாமி என்ற 9 மாத கைக்குழந்தையும் இருந்தனர்.

இந்த நிலையில் பட்டியூரிலிருந்து தூத்துக்குடிக்கு மனைவி, குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது தூத்துக்குடி - மதுரை புறவழிச்சாலைக்கு அருகே உள்ள கே. சண்முகபுரம் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்து அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் காளியப்பன், அவரது மனைவி, குழந்தை ஆகியோர் சாலையில் தூக்கிவீசப்பட்டார். இதில் மாலாவும், கைக்குழந்தையும் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காளியப்பன் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடம் சென்ற குறுக்குச் சாலை காவல் துறையினர், இறந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக, அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்

ABOUT THE AUTHOR

...view details