தூத்துக்குடி: விளாத்திகுளம் அருகே பெரியசாமிபுரத்தைச் சேர்ந்தவர், ராபர்ட் பெல்லார்மின் மகன் காமராஜ் ஞானமணி (38).
இவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று இவரது வீட்டிற்குள் கட்டி வைத்திருந்த 2 ஆடுகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி, இருசக்கர வாகனம் மூலம் கொண்டு செல்ல முயன்றுள்ளனர்.
அப்போது இரண்டு ஆடுகளும் கத்தி விட ஞானமணி மற்றும் அருகில் இருந்தவர்கள் ஆடுகளைத் திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்தனர்.
இதன் பின் கிராமத்தினர் அவர்களுக்கு தர்ம அடிகொடுத்து பெரியசாமிபுரம் கிராமத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் சிறைப்பிடித்து வைத்தனர்.
பின்பு, சூரங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் தூத்துக்குடி தெர்மல் நகரைச் சேர்ந்த கனி மகன் செந்தில்குமார் (36) மற்றும் கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த பெரியநாயகம் மகன் கருப்பசாமி (46) என்பது தெரியவந்தது.