தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் இயங்கி வருகின்றன. இந்த அலகுகள் மூலம் நாள்தோறும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் பராமரிப்பு ரீதியாக அவ்வப்போது ஏற்படும் சிறு, சிறு பழுதுகளுக்காக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் முழு மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்படுவது வழக்கம்.
தற்போது, தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 1, 3, 4, 5 அலகுகளில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதாகியுள்ளதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து பழுதாகிய யூனிட்களை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
காற்றாலை, நீர் ஆகியவற்றின் மூலமாக உற்பத்தியாகும் மின் ஆற்றல் தொகுப்பு அதிகரித்ததன் காரணமாக தமிழ்நாட்டில் மின் வெட்டு ஏற்படும் நிலை இல்லை என தூத்துக்குடி அனல்மின் நிலைய தலைமை பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.