தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்செந்தூர் கோவிலில் முதியவர்கள் தரிசனம் செய்ய தனிப்பாதை; பக்தர்கள் வரவேற்பு - Private lane for the elder people

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முதியவர்கள் தரிசனம் செய்ய தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

திருச்செந்தூர் கோவிலில் முதியவர்கள் தரிசனம் செய்ய தனிப்பாதை
திருச்செந்தூர் கோவிலில் முதியவர்கள் தரிசனம் செய்ய தனிப்பாதை

By

Published : Jun 28, 2022, 10:44 AM IST

திருச்செந்தூர்: சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மார்ச் 9-ந் தேதி முதல் இலவச பொது தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசனம் என இரண்டு வழியாக மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் விழா மற்றும் விடுமுறை நாள்களில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் முதியவர்கள் எளிதாக சென்று சாமி தரிசனம் செய்யும் வகையில் தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பாதை சண்முக விலாசம் மண்டபத்தில் உள்ள துலாபாரம் வாசல் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதியவர்கள் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகள்(சேர்கள்) போடப்பட்டுள்ளன.

திருச்செந்தூர் கோவிலில் முதியவர்கள் தரிசனம் செய்ய தனிப்பாதை

இந்த பாதையில் செல்லும் முதியவர்கள் தங்கள் வயதை உறுதிப்படுத்தும் வகையில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றினை காண்பித்து தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் 2 பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details