தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமலிருக்க முன்னேற்பாடுகள்: ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமலிருக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

குடிநீர் தட்டுப்பாடு

By

Published : May 28, 2019, 7:39 AM IST

தேர்தலுக்குப் பின்பு அரசு அலுவலகங்கள் மே 27ஆம் தேதி இயல்பு நிலைக்குத் திரும்பின. இதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

முன்னதாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மூன்று மாவட்டத்திற்கும் மணிமுத்தாறு, சேர்வலாறு, பாபநாசம் ஆகிய அணைகள் முக்கிய நீர் ஆதாரமாக இருந்துவருகின்றன எனத் தெரிவித்தார்.

இம்மாவட்டங்களின் தினசரி தண்ணீர் உபயோகத்திற்கு 300 கியூபிக் அளவுக்கு தண்ணீர் தேவைப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், தற்போது அணைகளில் உள்ள நீர் இருப்பு வருகிற ஜூன் 30ஆம் தேதி வரை மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யும் அளவுக்கு போதுமானதாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

குடிநீர் பிரச்னை ஏற்படாமலிருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்த அவர், தூத்துக்குடி மாவட்டத்தில் பாலிதீன் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது என்றார்.

தூத்துக்குடி மாவட்ட அரசு அலுவலர்கள் தேர்தல் பணிகளில் இருந்ததால் மீண்டும் பொதுமக்கள் பாலிதீனைப் பயன்படுத்துவதாகத் தெரியவந்துள்ளது. இன்று முதல் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் அரசு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு பாலீதீன் உபயோகத்தை தடைசெய்யும் விதமாக தீவிர சோதனைகளில் ஈடுபடுவார்கள் எனக் கூறினார்.

தற்போது கிராம பஞ்சாயத்து, ஊராட்சிப் பகுதிகளில் பாலீதீன் பயன்படுத்துவோர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுவருகிறது என்றார்.

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமலிருக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

ABOUT THE AUTHOR

...view details