தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 1, 2019, 11:53 PM IST

ETV Bharat / state

தேர்தல் பணிக்கு சென்ற காவலர் விஷம் குடித்து தற்கொலை!

தூத்துக்குடி: நாங்குநேரி இடைத்தேர்தல் பணிக்காக வந்த காவலர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

suside

தேனி மாவட்டம் தென்கரை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் கங்காதரன். இவர் தமிழக காவல்துறையில் 2009ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் நாங்குநேரியில் நடைபெறும் இடைத் தேர்தல் பணிக்காக இன்று மாலை காவல்துறை வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். விருதுநகர் அருகே வந்த பொழுது திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவருடன் வந்த காவலர்கள் கங்காதரனை சாத்தூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் சிகிச்சையின்போது காவலர் கங்காதரன் விஷமருந்தி இருப்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து கங்காதரனின் உடல் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது.

உயிரிழந்த காவலர் கங்காதரன்

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் கங்காதரன் குடும்ப தகராறு காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இச்சம்வம் குறித்து காவல் துறையின பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க: கட்டிப் புரண்டு சண்டை போட்ட பெண் காவலர்கள் - ஒருவர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details