தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள சினிமா தியேட்டரில் தனுஷ் நடித்த கர்ணன் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில், திரையரங்குக்கு படம் பார்க்க சென்ற இளைஞா்கள் சிலர் மது அருந்தியிருந்தால் அவர்களை படம் பார்க்க அனுமதிக்காமல் திரையரங்கு நிர்வாகிகள் பணத்தை திரும்ப கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.
இதையடுத்து, அந்த இளைஞர்களில் சிலா் திடீரென தங்கள் இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை பாட்டில்களில் பிடித்து திரையரங்கு வளாகத்தில் வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர்.