தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மனு அளித்தனர். அப்போது அங்கு வந்த ஜனநாயக உழைக்கும் பெண்கள் இயக்கம் சார்பில் சிறுமியை ஒய்வில்லாமல் வேலை வாங்கிவரும் நடிகை பானுப்பிரியா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
பின்னர் அந்த இயக்கத்தின் மாவட்டத் தலைவி ராமராலட்சுமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஆந்திர மாநிலத்தில் நடிகை பானுப்பிரியாவின் வீட்டில் சந்தியா எனும் 13 வயது சிறுமி வேலை செய்து வந்தாள். வேலைக்கு சேர்ந்த நாள் முதல் ஓராண்டு வரை தொடர்ந்து ஓய்வில்லாமல் அச்சிறுமியை நடிகை பானுப்பிரியா வேலை வாங்கியுள்ளார். வீட்டை சுத்தம் செய்தல், பாத்திரங்கள் கழுவுதல் உள்பட நாள் முழுவதும் அந்த சிறுமியை வேலை வாங்கியிருக்கிறார்.