தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு அலுவலர் vs மக்கள் பிரதிநிதி: மீட்பு பணி குறித்த மாறுபட்ட கருத்து! - அரசு அலுவலர் vs மக்கள் பிரதிநிதி

தூத்துக்குடி: கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருவதாக மாவட்ட ஆட்சியரும், அரசு அலுவலர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக சட்டப்பேரவை உறுப்பினரும் என இருவேறு கருத்து தெரிவிக்கப்பட்டிருப்பது பொது மக்களை குழப்பியுள்ளது.

Rescue operations
Rescue operations

By

Published : Dec 1, 2019, 9:55 PM IST

தூத்துக்குடியில் கடந்த இரண்டு வாரங்களாக விடாமல் கனமழைபெய்துவருகிறது. இதன் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து 30ஆயிரம் கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றுப்படுகையில் 160 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழை பாதித்த இடங்களில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் நடவடிக்கைகளில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்" என்றார்.

மீட்பு பணி

மழை பாதிப்பு குறித்து தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஜீவன் கூறுகையில், "தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதை தடுப்பதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால் தற்போது பெய்துள்ள கனமழையால் இந்தப் பகுதி மேலும் மோசமடைந்துள்ளது.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அனைவரும் சாலையில் திரண்டு நிற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தண்ணீரை வெளியேற்றுவதிலும் சிக்கல் உள்ளதால் பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். மாநகராட்சி அலுவலர்கள் தண்ணீரை வெளியேற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வேதனையளிக்கிறது. அவர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் இந்த பணி நடைபெறுவதில் தாமதம் ஆகிறது" என்றார்.

மீட்பு பணி

மீட்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரும், மக்கள் பிரதிநிதியும் இருவேறு கருத்து தெரிவித்திருப்பது அனைவரையும் குழப்பியுள்ளது.

இதையும் படிங்க: சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மதபோதகர் மீது பாய்ந்தது போக்சோ..!

ABOUT THE AUTHOR

...view details