தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே உள்ள கீழ வல்லநாடு, கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சின்னதுரை (45) - சங்கரம்மாள் (40) தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். பி.காம் பட்டதாரியான இவர்களது மகள், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், சின்னதுரையின் மகள் நேற்று(ஜன.23) பெற்றோர்களின் விருப்பத்தை மீறி தனது காதலனுடன் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. இதனால் மனவேதனையடைந்த சங்கரம்மாள் நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டார்.