தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்செந்தூர் கோயிலில் நயன்தாரா: ரசிகர்களாகிய முருக பக்தர்கள்! - நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்தனர்

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக வருகை தந்த நயன்தாராவையும் அவரது காதலர் விக்னேஷ் சிவனையும் கண்டு பக்தர்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர்.

nayanthara and vignesh shivan visit at tiruchendur murugan temple
nayanthara and vignesh shivan visit at tiruchendur murugan temple

By

Published : Dec 10, 2019, 10:59 PM IST

தமிழில் முன்னணி நடிகையாகத் திகழ்பவர் நயன்தாரா. இயக்குநர் விக்னேஷ் சிவனை அவர் காதலித்துவருகிறார். இருவரும் இணைந்திருப்பது போன்ற புகைப்படங்களை தங்களது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி வெளியிட்டுவருவதால், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது நயன்தாரா, நடிகர் ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி பகுதியில் நடைபெற்றுவருகிறது.

திருச்செந்தூர் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த நயன்தாரா , விக்னேஷ் சிவன்

இதனையடுத்து நேற்றிரவு திடீரென நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில், இருவரும் திருச்செந்தூரிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கும் சென்று இன்று சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: குமரி பகவதி அம்மன் ஆசியுடன் தொடங்கிய நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன்'

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details