தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 8, 2020, 6:19 AM IST

Updated : Dec 8, 2020, 7:01 AM IST

ETV Bharat / state

‘பண்பாட்டின் மீது எல்லை மீறினால் உங்களை முடித்துவிடுவோம்!’ - கறுப்பர் கூட்டத்திற்கு முதலமைச்சர் எச்சரிக்கை

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் இருக்கின்ற அசுர சக்திகளை, நாத்திக சக்திகளை, தேசவிரோத சக்திகளை வேறோடு அழிப்பதற்காக இந்த யாத்திரை மேற்கொள்ளப்பட்டது என நிறைவு விழாவில் கலந்துகொண்ட மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

வேல் யாத்திரை நிறைவு விழாவில் கலந்துகொண்ட சிவராஜ் சிங் சவுகான்
வேல் யாத்திரை நிறைவு விழாவில் கலந்துகொண்ட சிவராஜ் சிங் சவுகான்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நேற்று (டிச. 07) பாஜக மாநில தலைவர் முருகன் கடந்த ஒரு மாதமாக நடத்திய வேல் யாத்திரையின் நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நான் நான்காவது முறையாக மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசை வீழ்த்தி முதலமைச்சராகியுள்ளேன். முருகன் அவமானப்படுத்தப்பட்டதை எதிர்த்து இந்த யாத்திரை நடத்திய முருகனுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன்.

தமிழ்நாட்டில் இருக்கின்ற அசுர சக்திகளை, நாத்திக சக்திகளை, தேசவிரோத சக்திகளை வேறோடு அழிப்பதற்காக இந்த யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. எப்போதெல்லாம் தமிழ்நாடு மக்கள் சிரமப்படுகிறார்களோ அப்போதெல்லாம் நான் தமிழ்நாடு வருவேன். சுனாமி வந்தபோது தமிழ்நாட்டிற்கு வந்து 400 வீடுகள் கட்டி கொடுத்திருக்கிறேன்.

கறுப்பர் கூட்டம் என்கிற முட்டாள் கூட்டத்திற்கு ஒரு எச்சரிக்கைவிடுக்கிறேன், அவர்கள் எங்கள் வழியில் குறுக்கிட்டால் அவர்களுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். இந்த நாட்டில் ஆன்மிகமும், பக்தியும் இல்லாமல் யாரும் பூரணமாக முடியாது. நான் உங்களை மீண்டும் எச்சரிக்கிறேன் பண்பாடு, கலாசாரத்தின் மீது காயப்படுத்தினால் உங்களுக்கு எதிராக மக்கள் திரண்டுவருவார்கள்.

கறுப்பர் கூட்டத்திற்கு எச்சரிக்கைவிடுக்கிறேன், கலாசாரம் பண்பாட்டின் மீது எல்லை மீறினால் தமிழ்நாட்டு மக்களும், பாஜகவும் உங்களை முடித்துவிடுவார்கள். மத்திய அரசு கொண்டுவந்த விவசாய திட்டங்கள் அவர்களுக்கு எதிரானது அல்ல என்பதை நான் சவாலாக கூறிக்கொள்கிறேன்.

கரோனா காலத்தில்கூட ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான நிதி உதவிசெய்தோம். அனைவரும் சேர்ந்து அனைவருக்குமான முன்னேற்றத்தைத்தான் பாஜக பின்பற்றுகிறது. இந்து விரோத சக்திகளே உங்கள் முயற்சிகளைக் கைவிடுங்கள். பாஜக கலாசாரத்தை வளர்ச்சியை நோக்கி அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறது.

வேல் யாத்திரை நிறைவு விழாவில் கலந்துகொண்ட சிவராஜ் சிங் சவுகான்

இப்போது நேரடியாக களத்தில் நம்மை எதிர்கொள்ள முடியவில்லை. எனவே காங்கிரஸ், திமுக பொய்யான பரப்புரையை செய்ய தொடங்கிவிட்டனர். பிகாரைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும்.

தமிழ்நாட்டிலும் தேசிய ஜனநாயக கூட்டணி மூலம் ஆட்சி அமையும், சூரிய ஒளி மூலம் தாமரை மலரும். தமிழ்நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகளே இன்றைய இரவு உங்களுடையதாக இருக்கலாம் ஆனால் நாளைய விடியல் எங்களுடையது” என்றார்.

இதையும் படிங்க: பாஜகவின் வேல் யாத்திரை இன்று நிறைவு!

Last Updated : Dec 8, 2020, 7:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details