தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தான்குளத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.30 ஆயிரம் மோசடி - பேய்க்குளம் பணமோசடி

தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி கூலித் தொழிலாளியிடம் ரூ.30 ஆயிரம் வாங்கி ஏமாற்றிய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

money-laundering
money-laundering

By

Published : Aug 1, 2020, 8:22 AM IST

தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளம் விறகு கடையில் கூலி வேலை செய்துவருபவர் மனுவேல்(60). அவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் சாத்தான்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தான் பணிபுரிந்து வருவதாகவும், அதில் ஓட்டுநர் வேலை உள்ளது எனவும் கூறி நம்பவைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அந்த வேலையை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.30 ஆயிரம் முன்பணம் கேட்டுள்ளார். அதனால் மனுவேல் வீட்டிலிருந்த நகையை அடகு வைத்து ரூ.30 ஆயிரத்தை அவரிடம் கொடுத்து, தனது மகனுக்கு வேலையை வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.

பணத்தை வாங்கிகொண்ட நபர் தனது செல்போன் எண்ணை கொடுத்துவிட்டு, பேய்க்குளம் வந்து அழைக்கும்படி கூறிச் சென்றுள்ளார். அங்குச் சென்ற மனுவேல் அவரை அழைத்த போது செல்போன் அணைத்து வைக்கப்படிருந்தது.

அவரும் சொன்ன இடத்திற்கு வரவில்லை. அதையடுத்து தான் ஏமாற்றப்பட்டத்தை மனுவேல் அறிந்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:வங்கிக் கடன் பெற்றுத்தருவதாக பல கோடி மோசடி!

ABOUT THE AUTHOR

...view details