தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் தமிழக அரசின் கால்நடை கிளை மருத்துவமனை திறப்பு விழா, கயத்தார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நீர் சுத்திகரிப்பு இயந்திர செயல்பாடு தொடக்க விழா ஆகிய விழாக்கள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றன. விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு தொடக்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், 'கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் 2 இடங்களில் பறவை காய்ச்சல் தாக்கம் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. வரும்முன் காப்போம் என்ற முறையில் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லையில் 26 இடங்களில் கால்நடை மருத்துவ குழு அமைக்கப்பட்டு, அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு கிருமிநாசினி மூலமாக சுத்தம் செய்யப்படுகிறது. கால்நடை பராமரிப்புத்துறை சிறப்பாக பணியாற்றி வருகிறது.