தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'2ஜி ஊழல் கரையை மறைக்கவே திமுக தீர்மானம்!'

தூத்துக்குடி : 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் கறையைத் துடைக்க வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு அரசு மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து, திமுகவினர் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

By

Published : Sep 9, 2020, 3:57 PM IST

அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்ச் சந்திப்பு
அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்ச் சந்திப்பு

தூத்துக்குடியில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, திமுக பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, “திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தற்போது மத்திய புலனாய்வுத் துறை அலுவலர்களால் தூசி தட்டப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டுவருகிறது.

இந்தியாவிலேயே ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது திமுக ஆட்சிதான். அந்த வகையில் தங்கள்மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டை மறைக்கும் விதமாக திமுகவினர் ஆளும் கட்சியினர்மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். ஆனால் அவர்கள் கூறுவது போல எந்த ஒரு ஊழல் குற்றச் சாட்டையும் திமுகவினரால் நிரூபிக்க முடியவில்லை.

அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்ச் சந்திப்பு

தமிழ்நாடு அரசு மீது சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாமல் திமுகவினர் பல இடங்களில் அவமானப்பட்டுள்ளனர். ஊழல் குற்றச்சாட்டுகள் நிறைந்த திமுகவினர், அரசு மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியது வேடிக்கையானது. தங்கள் மீது விழுந்துள்ள ஊழல் கறையைத் துடைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்” என்றார்.

இதையும் படிங்க...”மோடி அரசின் பேரழிவுத் திட்டம்தான் இந்த ஊரடங்கு!” - ராகுல் தாக்கு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details