தூத்துக்குடி: நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் சபை மூலம், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு, ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை சபை நிறுவனர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார். இதை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அரசு மருத்துவமனை பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ஆட்சியர் செந்தில்ராஜ் பேட்டி
“இது குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா 2ஆவது அலை படிபடியாக குறைந்து, தற்போதைய தொற்று எண்ணிக்கை 30 என குறைந்துள்ளது. மக்களின் ஒத்துழைப்பு காரணமாகத்தான் தொற்று பரவுவதை குறைக்க முடிந்தது.
உருமாறிய டெல்டா, மியூட்டன் வகை வைரஸ் பரவுவதாக கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நாலுமாவடி ஏசு விடுவிக்கின்றார் சபை மூலம் மோகன் சி.லாசரஸ் ரூ.10 லட்சம் மதிப்பில் பல்வேறு மருத்துவ உபகரணங்களை வழங்கி உள்ளார்கள். இதுபோன்று திருச்செந்தூர் அரசு பொது மருத்துவமனைக்கும் ரூ.5 லட்சம் மதிப்பிலான கருவிகளை வழங்கி உள்ளார்கள்.