தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 19, 2021, 1:56 PM IST

ETV Bharat / state

மறைந்த கி.ரா உடலுக்கு வைகோவின் மகன் நேரில் அஞ்சலி!

தூத்துக்குடி: மறைந்த கி.ராவுக்கு கோவில்பட்டியில் சிலை அமைக்க வேண்டும்; நினைவரங்கம் கட்ட வேண்டும் போன்ற கோரிக்கைகளை மதிமுக பொது செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ முன் வைத்துள்ளார்.

mdmk
வைகோ மகன்

மறைந்த எழுத்தாளர் கி.ரா.வின் உடலுக்கு, மதிமுக பொது செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " முதுமை காரணமாக மரணமடைந்த கரிசல் குயில் என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணனுகக்கு, மதிமுக சார்பில் அஞ்சலி செலுத்துகிறோம்.

மறைந்த கி.ரா உடலுக்கு வைகோவின் மகன் நேரில் அஞ்சலி!

அவர் படித்த ஊராட்சி நடுநிலைப் பள்ளியைச் சீரமைக்க வேண்டும். கோவில்பட்டியில் அவருக்கு சிலை அமைக்க வேண்டும். அதே போல நினைவரங்கம் கட்ட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details