தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 20, 2021, 8:30 PM IST

ETV Bharat / state

காதல் விவகாரத்தில் டிவி மெக்கானிக் கொலை!

கோவில்பட்டி அருகே டிவி மெக்கானிக் அடையாளம் தெரியாத நபரால் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை
கொலை

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே குமாரகிரி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்புராஜ் மகன் சூரிய ராகவன் (வயது 31). இவர் எட்டயபுரத்தில் டிவி மெக்கானிக் கடை நடத்தி வருகிறார்.

இன்று (அக்.20) காலை கடையின் முன் நின்று கொண்டிருந்த இவர், அடையாள தெரியாத நபர் ஒருவரால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த எட்டயபுரம் காவலர்கள், சூரிய ராகவனின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை

முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட சூரிய ராகவனும் சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் ஆனந்தராஜ் என்பவரும் ஒரே பெண்ணை காதலித்து வந்ததும், இந்த விவகாரத்தில் கொலை நடந்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

கொலை

மேலும், இது தொடர்பாக எட்டையபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்தக் கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:500 ரூபாய்... அரை மணி நேரத்தில் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் - மோசடி இளைஞர் கைது

ABOUT THE AUTHOR

...view details