தூத்துக்குடியில் மள்ளர் பேராயம் தலைவர் இரா. சுபாசினி மள்ளத்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் வாழும் 13 கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் உள்ள மள்ளர் சமூகத்தினர், தேவேந்திர குல சமூகத்தைச் சேர்ந்த ஏழு உட்பிரிவு சாதியினரை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்றி தேவேந்திர குல வேளாளர் பட்டியலில் இணைத்து அரசாணை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி தேர்தலை புறக்கணித்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி புரியும் (திமுக,அதிமுக) திராவிட கட்சிகள் மள்ளர் சமூகத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலதாமதப்படுத்தியதன் விளைவுதான் இன்று நாங்குநேரி சட்டப்பேரவையின் இடைத் தேர்தல் புறக்கணிப்பில் வந்து நிற்கிறது.