லாரிகளில் ஏற்றப்படும் தீப்பெட்டி பண்டல்களுக்கான ஏற்று கூலி, இறக்குக் கூலியை சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தீப்பெட்டி உற்பத்தியாளர்களே வழங்க வலியுறுத்தி கடந்த 21ஆம் தேதி முதல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகியவற்றில் உள்ள லாரி உரிமையாளர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தூத்துக்குடி கண்டெய்னர் மற்றும் டிரெய்லர் அசோசியேஷன் ஆகியவை ஆதரவு தெரிவித்தன.
இந்நிலையில் இன்று கோவில்பட்டியில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் லாரி உரிமையாளர்கள் சங்கம், தீப்பெட்டி புக்கிங் அசோசியேஷன் சங்கம், நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், வரும் 1ஆம் தேதி முதல் லாரிகளில் தீப்பெட்டி பண்டல்களை ஏற்றுவதற்கான ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி, மாமூல் மற்றும் குடோன் வாடகை ஆகிய எந்த செலவையும் லாரி உரிமையாளர்கள் கொடுக்கத் தேவையில்லை.