தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 7, 2020, 4:39 PM IST

ETV Bharat / state

நூற்பு ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே தனியார் நூற்பு ஆலை தொழிலாளர்கள் போனஸ் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Labour protest
Labour protest

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் நூற்பு ஆலையில் போனஸ் வழங்கக் கோரி ஐஎன்டியூசி தொழிலாளர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு அறிவித்த 8.33 விழுக்காடு போனஸ் இரண்டு தவணையாக வழங்குவதைக் கண்டித்தும், தொழிலாளருக்கு வருடம்தோறும் பயணப்படி வழங்குவதை ஐந்து மாதங்களாகக் காலதாமதப்படுத்துவதைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐஎன்டியூசி தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆலை முன்பு கறுப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஐஎன்டியூசி தொழிலாளர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details