தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுடன் உணவு உண்ட கோவில்பட்டி கோட்டாட்சியர் - ஆசிரியர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படித்தியுள்ளது

கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ, மாணவிகளுடன் தரையில் அமர்ந்து கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி மதிய உணவு உண்டார்.

மாணவர்கள் மத்தியில் மதிய உணவு அருந்திய கோட்டாட்சியர்
மாணவர்கள் மத்தியில் மதிய உணவு அருந்திய கோட்டாட்சியர்

By

Published : Aug 3, 2022, 9:40 PM IST

தூத்துக்குடி:கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் அருகே மாற்றுத்திறனாளி பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் தன்னார்வலர்கள் சார்பில் ஆடிப்பெருக்கு திருநாளை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

மாணவர்களுடன் உணவு உண்ட கோவில்பட்டி கோட்டாட்சியர்

மேலும் அவர்களுடன் தரையில் அமர்ந்து மதிய உணவு அருந்தி மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் உரையாடினார். இச்சம்பவம் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:பெரியார் சிலை குறித்து அவதூறாகப்பேசியதாக கனல் கண்ணன் மீது புகார்!

ABOUT THE AUTHOR

...view details