தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 11, 2020, 9:35 AM IST

ETV Bharat / state

தூத்துக்குடியில் கத்திக்குத்தில் காயமடைந்த காவலர் உயிரிழப்பு!

தூத்துக்குடி: காவலர் ஒருவர் மற்றொரு காவலரைக் குத்தியதில் காயமடைந்த அவர், இன்று (ஜூன் 11) உயிரிழந்தார்.

தூத்துக்குடியில் கத்திக்குத்தில் காயமடைந்த காவலர் உயிரிழப்பு!
தூத்துக்குடியில் கத்திக்குத்தில் காயமடைந்த காவலர் உயிரிழப்பு!

தூத்துக்குடி மத்தியபாகம் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சேர்மபாண்டி மகன் புங்கலிங்கம் (34). இவர் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்துவருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 9) தூத்துக்குடி - பாளை சாலையில் உள்ள எம்ஜிஆர் பூங்கா அருகே பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது புங்கலிங்கத்திற்கும் பூங்கா காவலாளியாகப் பணிபுரியும் மறவன்மடத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் செல்வம் (44) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த செல்வம், காவலர் புங்கலிங்கத்தைச் சரமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த புங்கலிங்கம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து தென்பாகம் காவல் துறை ஆய்வாளர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து, செல்வத்தை கைதுசெய்தார்.

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புங்கலிங்கம், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். மறைந்த புங்கலிங்கத்துக்கு காசியம்மாள் என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

இதையும் படிங்க...கத்தியைக் காட்டி ஜவுளிக் கடையில் கொள்ளை!

ABOUT THE AUTHOR

...view details