கோவில்பட்டி கதிர்வேல் நகரைச் சேர்ந்த சுப்ரமணி என்பவரது மகன் முத்துராஜ்(54). இவர் கோவில்பட்டி முத்தானந்தபுரம் தெருவில் டெய்லர் கடை வைத்துள்ளார். இவருக்கு ஜெயா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.
மினிலாரி-பைக் மோதியதில் ஒருவர் பலி! - thoothukud biker dead
தூத்துக்குடி: கோவில்பட்டியில் மினிலாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இருசக்கர வகனத்தில் வந்தவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்த முத்துராஜ்
முத்துராஜ் தனது வீட்டில் இருந்து கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த மினிலாரி கட்டுபாட்டை இழந்து பைக் மீது மோதி விபத்துக்குள்ளனாது. இதில் முத்துராஜ் சம்பவ இடத்தில் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி காவல் துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல் துறையினர் மினிலாரி ஒட்டுனரான, நெல்லை பேட்டையை சேர்ந்த அப்துல் ரகுமானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.