தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகாவுக்கு உட்பட்ட வில்லிசேரிப் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தங்கப்பாண்டி( 34). இவருடைய மனைவி கற்பகம் (32). இவர்களுக்கு கீர்த்திகா (11) மனோசித்ரா (9) ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
கடந்த 8.2.2015 அன்று குடும்ப செலவுக்காக கற்பகத்தின் தாய் வீட்டிலிருந்து ரூபாய் ஐம்பதாயிரம் பணம் வாங்கி வரவேண்டும் என கேட்டு தங்கபாண்டி தகராறு செய்துள்ளார். இதையடுத்து தாய் வீட்டுக்குச் சென்ற கற்பகம், சில நாட்களுக்குப்பின் மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது, "பணம் கொண்டு வராமல் ஏன் இங்கு வந்தாய்" என கேட்டு தங்கபாண்டி, கற்பகத்துடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த தங்கபாண்டி மனைவி என்றும் பாராமல் கற்பகத்தை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இதுகுறித்த, புகாரின் பேரில் கயத்தாறு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக தங்கப்பாண்டி, அவரது சகோதரியின் மகளை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார்.