தூத்துக்குடி: குற்றச்செயல்களை குறைக்கும் பொருட்டு மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி மாவட்டம் முழுவதும் முக்கிய சந்திப்புகள், இடங்கள், சாலைகள் போன்றவற்றில் கன்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, அந்தந்த காவல் சரக உட் கோட்டங்களில் கண்காணிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
குண்டர் சட்டத்தில் 100பேர் கைது
மேலும், ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கஞ்சா கடத்தல், புகையிலை விற்பனை, கொலை, கொள்ளை, பாலியல் தொழிலில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் நடவடிக்கைகளில் மாவட்ட காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.