தூத்துக்குடியில் இந்திய தொழில் வர்த்தக சங்கம் சார்பில், வ.உ.சி துறைமுகத்தில் சிறந்த ஏற்றுமதியாளர், துறைமுக உபயோகிப்பாளர்கள், சிறந்த துறைமுக சேவையாளர்கள், சிறந்த தொழில் முனைவோர்கள், சூப்பர் பிராண்ட் தயாரிப்பாளர் உள்ளிட்டவர்களுக்கு விருதுகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விருதுகளை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வழங்கினார்.
இவ்விழாவில் உரையாற்றிய தமிழிசை, வளம் மிக்க தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக நான் தொடர்ந்து அரசியலுக்கு அப்பாற்பட்டு நடவடிக்கை எடுப்பேன். இந்தப் பகுதியில் அதிகமாக கிடைக்கும் உப்பு, வாழை, பனை பொருட்களிலிருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்து தொழிலை மேம்படுத்தவேண்டும். இந்தப் பகுதியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.