தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம்! - Hindu Religious Charities marriage

Thoothukudi news: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தூத்துக்குடி சிவன் கோயிலில் இரண்டு ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தூத்துக்குடி கோயிலில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தூத்துக்குடி கோயிலில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 3:36 PM IST

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தூத்துக்குடி கோயிலில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

தூத்துக்குடி:தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிவன் கோயலில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், நிர்வாக ரீதியாக இருக்கின்ற 20 மண்டலங்களில், வறுமை கோட்டிற்கு கீழுள்ள 25 மணமக்களுக்கு அப்பகுதி திருக்கோயில்களில் திருமணம் நடத்தப்படும் என மானிய கோரிக்கை அறிவிப்பினை செயல்படுத்திடும் விதமாக பல்வேறு திருமணங்கள் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள முத்தையாபுரத்தை சார்ந்த சந்திரசேகரன் - நிஷா மற்றும் திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து மற்றும் கொல்லம்பரும்பு கிராமத்தை சேர்ந்த வசந்தி ஆகிய இரு ஜோடிகளுக்கும் தூத்துக்குடி சிவன் கோயில் சார்பாக கோயில் நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி மற்றும் தலைமை குருக்கள் சுப்பிரமணிய பட்டர் திருமணத்தை நடத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:ராணிப்பேட்டையில் 36 வருடங்களுக்கு பிறகு சந்தித்த பள்ளி மாணவர்கள்- ஆசிரியர் தின விழா கொண்டாடி மகிழ்வு!

மேலும், மணமக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 50 ஆயிரம் மதிப்பில் 2 கிராம் தங்கம், மிக்சி, பீரோ, கட்டில், மெத்தை, பாய், பித்தளை குத்துவிளக்கு, எவர் சில்வர் குடம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மணமக்கள் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு திருமண உணவு வழங்கப்பட்டது.

மேலும், திருமண விழாவில் சிவன் கோயிலின் தலைமை குருக்கள் சுப்பிரமணிய பட்டர், இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் ருக்மணி மற்றும் செயல் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்களை கோயில் நிர்வாக அதிகாரி அட்சதை தூவி வாழ்த்தினார்.

இதையும் படிங்க:திருப்பூரில் வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை!

ABOUT THE AUTHOR

...view details