தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 9, 2019, 10:30 AM IST

ETV Bharat / state

கஞ்சா விற்பனை: தூத்துக்குடியில் ஐந்து இளைஞர்கள் கைது!

தூத்துக்குடி: தாளமுத்துநகரில் கஞ்சா விற்பனை செய்ய முயன்றதாக ஐந்து இளைஞர்களை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை : 5 இளைஞர்கள் கைது!
தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை : 5 இளைஞர்கள் கைது!

தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் துறை உதவி ஆய்வாளர் மகராஜன் நேற்று நகர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோமஸ்புரம் இசக்கியம்மன் கோவில் அருகே ஐந்து பேர் சந்தேகபடும்படியாக நின்றுள்ளனர்.

இதனையடுத்து அந்த ஐந்து பேரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் அவர்களை சோதனை செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்த சுமார் ஒரு கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் கீழஅழகாபுரியை சேர்ந்த லட்சுமணன் (20), கர்ணன் (19), சுனாமி காலனியை சேர்ந்த பீர்முகமது (19). ஆரோக்கியபுரத்தை சேர்ந்த சபாபதி (19). டி.சவேரியார்புரத்தை சேர்ந்த மாரிச்செல்வம் (19) என தெரியவந்தது.

இதையும் படிங்க...தகராறில் ஆட்டோவை பெட்ரோல் ஊற்றி எரித்த 2 இளைஞர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details