தூத்துக்குடி மாவட்டம் கலைஞர் அரங்கில் திமுக எம்எல்ஏ கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை மாநகராட்சி அலுவலர்கள் அறிந்தும் அறியாதது போல் உள்ளனர். நான் எதிர்க்கட்சி எம்எல்ஏவாக உள்ளதால் என்னுடைய பணிகளையும் ஆளுங்கட்சியினரின் தடுக்கின்றனர்.
மாநகர் பகுதிகளில் குறைந்த குதிரைத் திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மூலமே தண்ணீரை அகற்றுகிறார்கள். அவையும் சரிவர வேலை செய்யாமல் போகிறது. எனவே, வெள்ளநீரை வெளியேற்ற துறைமுக சபையின் ஒத்துழைப்போடு நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
மழை நீர் சூழ்ந்துள்ள நேதாஜி நகர், கதிர்வேல்நகர், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. மாநகராட்சி சார்பாக நடைபெறும் அனைத்து பணியில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் அனைவரும் உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு நெருங்கியவர்கள்.